குளியலறையினுள் குழந்தை பெற்றெடுத்த பாடசாலை மாணவி!
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணவி குளியலறையில் இருந்தபோது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறையை திறந்துள்ளார். இதன்போது அங்கு மகளுக்கு குழந்தை பிறந்துள்ளமையினை பார்த்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed